18/05/2026
பாடசாலையின் இலட்சனை தொடர்பாக.
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
ஒரு பாடசாலையின் அல்லது அரச நிறுவனத்தின் இலட்சனை, பெயர்பலகை போன்றவை குறித்த நிறுவனங்களின் இறைமை, தனித்துவம் மற்றும் சட்ட ஒழுங்குடன் தொடர்புடைய ஒரு முக்கிய விடயமாகும். இதன் பயன்பாடு, பொதுவான விதிகள் பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்படும் நிர்வாக கோவை விதிகளின் படி நிர்வகிக்கப்படுகின்றன.
எனவே அரச நிறுவனங்களின் இலட்சினைகளை எந்தவொரு தனிநபரும் சட்டத்திற்கு முரணாக பயன்படுத்துவது, மாற்றம் செய்வது சட்ட ரீதியான குற்றமாகும்.
கடந்த 07/05/2026 அன்று சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து, எமது பாடசாலையின் அங்கீகரிக்கப்பட்ட இலட்சினையை மாற்றம் செய்து முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியீடு செய்யப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும். இது தொடர்பாக உரிய நபர்கள் சிலரை தொடர்பு கொண்டு அதனை நீக்குவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இச் செயற்பாடு எதிர்வரும் காலங்களில் மேற்கொள்வது, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வது, அதற்கான பின்னூட்டல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான சட்ட நடவடிக்கையினை பாடசாலை நிர்வாகம் மேற்கொள்ளும் என்பதனையும் அறியத்தருகிறோம்.
-பாடசாலை நிர்வாகம்-