Uva Marabu Pokkisham

Uva Marabu Pokkisham

Share

Uva Marabu Pokkisham (Uva ) | Sri Lanka The dedicated platform for the rich culture, history, and arts of the Malayaga Uva Tamil community.

Featuring:

Traditional Tamil and folk dance

Hill Country music and arts

Hinduism program

13/04/2026

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026! 🌸

நமது பாரம்பரியமும், பண்பாடும் என்றும் தழைத்தோங்க... பிறக்கின்ற இந்தப் புத்தாண்டு உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்யட்டும்.

​ஊவா மண்ணின் மரபுகளைப் போற்றும் எமது "ஊவா மரபுப் பொக்கிஷம்" பக்கத்தின் சார்பாக, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

​"மரபுகள் போற்றுவோம்... மனிதம் வளர்ப்போம்! இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள் - ஊவா மரபுப் பொக்கிஷம்"

Photos from Uva Marabu Pokkisham's post 25/03/2026

"அஸ்தமன கதிரவன் மீன்டும் உதயமானது போன்று"

இன்றைய தினம் 25 /03 /2026 முதல் மீண்டும் பதுளை யாழ்ப்பாணவத்தையில் ஆரம்பிக்கப்பட்ட "பரதநாட்டிய வகுப்பு "

[பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் பரதநாட்டிய ஆசிரியராகவும் ,திலக
நர்த்தனாலயத்தின் ஸ்தாபகராகவும் பிரதான குருவாக விளங்கிய திருமதி.யசோதரா விவேகானந்தன் அவர்களின் பிரதான சீடர்களில் ஒருவரான செல்வி. பிரகாஷினி பாலசுந்தரம்(Hashini balasundaram) அவர்களால் இந்த வகுப்பு இன்றைய தினம் ஆரம்பிக்கபட்டது]

ஊடக பிரிவு
(V.KAVEEWARNAN)
(Uva Marabu Pokkisham)

15/01/2026

"பொங்கும் பொங்கலைப் போல உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்! 🌾

​நமது ஊவா மண்ணின் மரபுகளைக் காப்போம், நம் கலாச்சாரப் பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம்.

'ஊவா மரபுப் பொக்கிஷம்' சார்பாக அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! ☀️🙏"
2026

31/12/2025

*✨ Happy New Year 2026 ✨*

Wishing you and your loved ones a year filled with happiness, good health, success, and endless blessings!
May 2026 be a year of new beginnings, stronger dreams, and beautiful memories.
Let’s welcome this new chapter with hope and positivity! 🌟

✨ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026 ✨*

இந்த ஆண்டில் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி மற்றும் ஆசீர்வாதங்கள் நிரம்பி வாழ வாழ்த்துகிறேன்.
2026 ஆண்டு புதிய தொடக்கங்களையும், வலிமையான கனவுகளையும், அழகான நினைவுகளையும் கொண்டு வரட்டும்.
நம்பிக்கையுடனும் நேர்மறையான எண்ணங்களுடனும் புத்தாண்டை வரவேற்போம்! 🌟

HappyNewYear2026

Photos from Uva Marabu Pokkisham's post 15/12/2025

அரச அறிவிப்பு | கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறை

கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:

📞 1905

📞 ஜனாதிபதி செயலகம்:

011 235 4354
011 235 4655
011 248 4500 / 600 / 700

முறைப்பாடு செய்யும்போது வழங்க வேண்டிய விவரங்கள்:

1. கிராம சேவகரின் பெயர்

2. அவர் பணியாற்றும் கிராம சேவை பிரிவு

3. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவு

4. மாவட்டம்

5. நீங்கள் பாதிக்கப்பட்ட விவரம் அல்லது
– கிராம சேவகர் ஊடாக பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடி கொடுப்பனவுகள் / முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்

மொழி வசதி:

🗣️ தமிழ், சிங்களம், ஆங்கிலம் – மூன்று மொழிகளிலும் உங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும்.

அரசின் உறுதி:

யாரிடமும் சென்று கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்கள் உரிமையை முதலில் உங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் கேளுங்கள். தவறு தொடர்ந்தால், அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொடர்பு இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் செய்யுங்கள்.
நிச்சயமாக, உங்கள் உரிமைக்கான நீதி காலதாமதமின்றி கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.

இந்த தகவலை பொதுமக்களின் நலனுக்காக பகிருங்கள்.

07/12/2025

இலங்கைத் தீவானது இன்று சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரித்தான "சிங்கள தேசம்" என்று முன்னிறுத்தப்பட்டாலும், வரலாற்றின் ஆழமான பக்கங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன. இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; இது தமிழ், சிங்களம், முஸ்லிம் என மூவின மக்களுக்கும் சொந்தமான ஒரு பல்லினப் பண்பாட்டு நாடு (Multicultural Country).

ஆனால், வரலாற்றைத் திரித்து, பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நடக்கும் திட்டமிட்ட முயற்சிகளை நாம் சான்றுகளுடன் எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

உலகில் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் திகழும் தமிழைப் போன்று சிங்களம் ஒரு தூய மொழி (Pure Language) அல்ல.

மொழியியல் ரீதியாகப் பார்க்கும்போது, சிங்களம் என்பது வட இந்தியாவில் இருந்து வந்த பாலி, சமஸ்கிருதம் மற்றும் வங்காளப் பகுதியின் மொழிகளுடன், திராவிட மொழியான தமிழின் வேர்ச்சொற்களும் பெருமளவில் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பு மொழியாகும் (Mixed Language).

கி.மு. காலத்திலிருந்தே தமிழ் மொழியில் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ள நிலையில், சிங்கள மொழிக்கு அத்தகைய நீண்ட நெடிய, தனித்துவமான வரலாறு கிடையாது. அது காலப்போக்கில் பல மொழிகளின் கலவையால் உருவானதே தவிர, இந்த மண்ணின் ஆதி மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

சிங்கள இனம் தான் இலங்கையின் ஆதி இனம் என்று கூறுவது வரலாற்றிற்கு முற்றிலும் முரணானது. பௌத்த நூலான மகாவம்சமே இதற்குப் பதில் சொல்கிறது.

இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயனும் அவனது 700 தோழர்களும் இலங்கைத் தீவில் வந்திறங்கியபோது, அவர்களை குவேனி என்னும் இயக்கர் குலப் பெண்மணி வரவேற்றதாக வரலாறு கூறுகிறது.

விஜயன் வரும்போதே இங்கு குவேனி என்ற அரசி வாழ்ந்திருக்கிறார் என்றால், விஜயனுக்கு முன்பே இங்கு ஒரு செழிப்பான நாகரீகம் இருந்துள்ளது. குவேனி சார்ந்த 'இயக்கர்' மற்றும் 'நாகர்' குலங்கள் என்பன தமிழர்களின் ஆதி குலங்களாகும். இவர்களே இந்த மண்ணின் மூத்தகுடிகள் (Indigenous People).

எனவே, பிழைப்புத் தேடி வந்தவர்களே (விஜயன் வழித்தோன்றல்கள்) தங்களை மண்ணின் மைந்தர்களாகக் காட்டிக் கொள்வதும், ஏற்கனவே இங்கு ஆண்ட தமிழர்களை அந்நியர்களாகச் சித்திரிக்க முயல்வதும் மாபெரும் வரலாற்று மோசடியாகும்.

தமிழர்களின் பூர்வீகத்தை மறைக்க நினைப்பவர்கள், இன்றும் சாட்சியாய் நிற்கும் வழிபாட்டுத் தலங்களை மாற்றியமைக்கத் துடிக்கின்றனர். இதற்குச் சிறந்த உதாரணங்கள் கதிர்காமம் மற்றும் நயினாதீவு ஆகும்.

🔹கதிர்காமம்:
இது தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் புனித பூமி. பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் "கதிர்காமக் கந்தன்" என்று போற்றி வணங்கி வரும் தலம் இது. ஆனால், இன்று அது சிங்களமயமாக்கப்பட்டு பௌத்த இடமாகச் சித்தரிக்கப்படுகிறது. சிங்கள மொழி அல்லது பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழர்கள் கதிர்காமத்தில் முருகனை வழிபட்டு வந்துள்ளனர் என்பதே உண்மை.

🔹நயினாதீவு (நாகதீபம்):
பண்டைய தமிழ் இலக்கியமான மணிமேகலை காப்பியத்தில் "மணிபல்லவம்" என்று குறிப்பிடப்படும் நயினாதீவானது, தமிழர்களின் ஆதிக்குடிகளான நாகர்கள் வாழ்ந்த இடமாகும். இங்குள்ள நாகபூசணி அம்மன் ஆலயம் மிகவும் தொன்மையானது. ஆனால், இன்று அதனை "நாகதீப விகாரை" என்று முன்னிறுத்தி, அங்குள்ள தமிழ்ப் பண்பாட்டை மறைத்து, அது பௌத்தர்களுக்கு மட்டுமேயான இடமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.

இவை வெறும் மதத் தலங்கள் மட்டுமல்ல, தமிழர்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்பதற்கான அழியாத வரலாற்று ஆவணங்கள்.

இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் (Archaeology Department) ஒரு அரசியல் ஆயுதமாகச் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் திட்டமிட்டே சிங்களவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி, தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிக்கும் அல்லது திரிக்கும் வேலைகள் நடைபெறுகின்றன.

தமிழர் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யும்போது கிடைக்கும் தமிழ் பிராமி கல்வெட்டுகளையும், சைவ ஆலயச் சிதிலங்களையும் மறைத்துவிட்டு, அங்கு புத்தர் சிலை இருந்ததற்கான போலி ஆதாரங்களை உருவாக்குகின்றனர்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகளை அழித்தாலும், உண்மையை ஒருபோதும் மண்ணிட்டு மூட முடியாது.

இன்று வடக்கு-கிழக்கு பகுதிகளில் பௌத்த பிக்குகளின் தலைமையில் நடைபெறும் நில அபகரிப்புகளும், "புனித பூமி" என்ற பெயரில் நடக்கும் ஆக்கிரமிப்புகளும் சாதாரணமானவை அல்ல. இவை தமிழர்களின் இருப்பை அழித்து, இலங்கையை முழுமையாக ஒரு சிங்கள-பௌத்த நாடாக மாற்றும் கபட எண்ணத்தின் வெளிப்பாடே ஆகும்.

தொல்லியல் என்ற போர்வையில் எமது நிலங்களை அபகரித்து, அதனை சிங்களவர் தேசமாக மாற்ற நினைக்கும் சூழ்ச்சியைத் தமிழர்களாகிய நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை என்பது சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தான தனிச்சொத்து அல்ல. கதிர்காமம் முதல் நயினாதீவு வரை பரந்து கிடக்கும் சான்றுகள், தமிழர்களே இந்த மண்ணின் மூத்தகுடிகள் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றன.

சிங்கள மொழியோ அல்லது இனமோ தூய தோற்றம் கொண்டவை அல்ல என்பதையும், அவை கலப்பினால் உருவானவை என்பதையும் வரலாறு நிரூபிக்கிறது.

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஒரு கசப்பான உண்மை நெஞ்சை உலுக்குகிறது.

அன்று மட்டும் விஜயனையும் அவனது கூட்டத்தையும் உள்ளே விடாமல், குவேனி அடித்துத் துரத்தியிருந்தால், இன்று தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய அழிவுகளும், வரலாற்றுத் திரிபுகளும் ஏற்பட்டிருக்காது. வந்தவர்களை வாழவைத்த பெருந்தன்மையே, இன்று தமிழர்களின் இருப்புக்கே ஆபத்தாக முடிந்துள்ளது.

வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து, எமது மண்ணின் உரிமையை நிலைநாட்ட வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இலங்கை ஒரு பல்லின மக்களுக்கான தேசம் (Multicultural Country) என்ற உண்மையை உலகறியச் செய்வதே இக்காலத்தின் தேவையாகும்.

04/12/2025

(Important news for to every srilankan citizens. )

அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் அமைச்சர்களிடம் பேசுங்கள்....
உங்களது கேள்விகளை கேட்கலாம்...

தோழர் டில்வின் - 0775019079
பிமல் ரத்நாயக்க - 0773111226
ஹரிணி அமரசூரிய - 0777880737
விஜித ஹேரத் - 0714824345
லால் காந்த - 0712473104
வசந்த சமரசிங்க - 0773029004
சுனில் ஹந்துன்நெத்தி - 0773908760
சுனில் வதகல - 0772349348
ஆனந்த விஜேபால - 0773041587
நளிந்த ஜயதிஸ்ஸ - 0718100605
நளின் ஹேவகே - 0754011047
அனில் ஜயந்த - 0714463949
ஹர்ஷன நாணயக்கார - 0773572736
சரோஜா பால்ராஜ் - 0714878676
சதுரங்க அபேசிங்க - 0773402253
சமந்தா வித்யாரத்னா - 0714463944
அருண் ஹேமச்சந்திர - 0773377325
மஹிந்த ஜயசிங்க- 0777685038
முனீர் முலஃபர்- 0777306744
ஹினிதும சுனில் செனவி - 0714370706
லக்மாலி ஹேமச்சந்திர - 0776021250
ஜனித் இந்திக்க - 0711010014
குமார ஜெயக்கொடி - 0718457920
டி.பி.சரத் - 0719178866
எரங்க குணசேகர - 0718457920
நாமல் கருணாரத்ன - 0707220005
பிரசன்ன குணசேன - 0772619242
கலாநிதி அசோக ரன்வல - 0718342092

04/12/2025

இலங்கை வாழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு.(அவதானமாக இருக்கவும்)

Want your business to be the top-listed Gym/sports Facility in Badulla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Badulla
90000