02/10/2025
வெள்ளைக்காரன் நம்மை அடிமைப்படுத்தி விட்டான்..
நாம் விடுதலை பெற்று மக்களாட்சி அமைத்து உலகில் நாமும் மற்ற நாடுகளைப் போன்று வானளாவிய கட்டடங்கள், அவர்களைப் போன்று காலாச்சாரத்தை பின்பற்றி நம் நாடும் மாற வேண்டும் என சிந்தித்த காலத்தில்...
நாம் இரத்தம் சிந்தியாவது சுதந்திரத்தை பெற்று விடுவோம், ஆனால் சுதந்திரம் பெற்ற பின் நாம் எவ்வாறு வாழ்வோம்?
5000 ஆண்டுகளாய் தொன்றுதொட்டு தர்மத்தின் அடிப்படையில் வாழும் நம் கலாச்சாரத்தை யார் பாதுகாப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது...
ஒரு சிலருக்கு தோன்றினாலும் அதை வேகமாக வளரும் உலகில் பல தலைமுறைகளுக்கு யார் கொண்டு சேர்ப்பார்?
பாரதம் எனும் இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டை எவ்வாறு காக்க முடியும்? ஒருவர் அதை முன்னெடுத்தாலும் அவரின் இறப்புக்கு பின் அந்த இயக்கம் என்னவாகும்? இவ்வாறு எழுந்த கேள்விக்கு பதில் இத்தேசத்தினை சீரமைத்து நம் கலாச்சாரத்தை பாதுகாப்பதை தன் கடமையாக, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தேசத்தின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடு படும் தன்னலமற்ற சேவகர்கள் நாட்டுக்குத் தேவை. யார் தலைமையில் பணியாற்றுவர்? எந்தக் கோட்பாடின் அடிப்படையில் பணியாற்றுவர்? ஒருவரிடம் இருந்து தலைமையை அடுத்த தலைமுறைக்கு யார் எடுத்துச் செல்லுவர்? அப்படியே எடுத்துச் சென்றாலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தர்மத்தை பாதுகாக்கும் தன்மையை இழக்காமல் எவ்வாறு எடுத்துச் செல்வர்?
எந்தக் கோட்பாடின் அடிப்படையில் பணியாற்றுவர்? இத்தனை கேள்விக்கும் அடிப்படையாக கொண்டு இத்தேசம் முன்னேற ஒரு சங்கம் வேண்டும் என்ற அடிப்படையில் தன்னலமற்று தேசப் பணியாற்றும் சேவகர்களுக்கான் சங்கம் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் என்று விஜயதசமி நன்னாளில் இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன் நாக்பூரில் தொடங்கி வைத்தார் இச்சங்கத்தின் முதல் சர்சங்கச்சாலக் டாக்டர். கேசவ பலிராம் ஹெட்கேவார்.
சனாதன தர்மத்தை அடிப்படை கோட்பாடாகக் கொண்டு இந்த சங்கத்தில் இணையும் அனைவருக்கும் குரு ' பகவாக் கொடி' என்று அழைக்கப்படக் கூடிய காவிக் கொடியே நம் குரு என்ற கோட்பாட்டை சங்கத்தின் கோட்பாடக அறிமுகப்படுத்தினார். இத்தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் நம் அனைவருக்கும் குருவாய் பகவாக் கொடியே இருக்கும்...
யாருக்கும் யாரும் குறைந்தவர் அல்ல அனைவரும் சமம் என்று கூறினார்.
நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்து, தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம்..
பல நூறு ஆண்டுகள் இதே போன்று தேசத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து தேசப் பணியாற்ற ஸ்வயம் சேவகர்களாய் நாம் விஜயதசமி நன்னாளில் உறுதியேற்போம்...
பாரத் மாதா கி ஜெய்...
Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)
ABVP-North Tamilnadu
ABVP South Tamilnadu
02/01/2025
07/11/2024
30/09/2024
09/07/2022
26/01/2022
18/01/2022
16/10/2021
16/10/2021
14/10/2021