17/08/2023
சாகசமும் 🔥சண்டையிம்
என்னுள் இருந்து பிரிக்க முடியாது ஓன்று!
believe it or not 🔥one man stunt show❤️🔥
சாகசமும் 🔥சண்டையிம்என்னுள் இருந்து பிரிக்க முடியாது ஓன்று!🔥 one man stunt show 🔥This was one and half hour long marathon variant stunts was performed at 2...
16/09/2022
Paalee Sathishwer vs. Rahul Sonkamble | Warrior's Dream Series Pune | Pro MMA Fight | Indian MMA
Here is the pro MMA fight between Paalee Sathishwer (Blue Corner) and Rahul Sonkamble (Red Corner) which happened at the Warrior's Dream Series event in Pune...
22/04/2022
தங்கள் இந்த பதிவுக்கு நன்றிகள் பல 🙏 மற்றும் மிகவும் மகிழ்ச்சி 🖤❤️
18/05/2021
ஒரு நாட்டில் ஒரு மல்யுத்த வீரன் இருந்தான். மிகுந்த மன உறுதியும் தன்னம்பிக்கையிம் கொண்ட மாவீரன் அவன். உள்நாடு வெளிநாடு என பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கடுமையான போட்டிகளில் பங்கு பெற்று தொடர் வெற்றிகளை பெற்று வந்தான்.
தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறவிறுக்கும் மாவீரன் மல்யுத்த போட்டிக்காக தன்னை தயார்ப்படுத்தி கொண்டிருந்தான். அந்நேரத்தில் அவன் நாட்டில் கொள்ளை நோய் வேகமாக பரவி வந்தது. பலரும் அந்நோயால் பல இன்னல்களை சந்தித்து வந்தனர். அந்நாட்டில் முக்கால் வாசிப்பேர் சந்தர்ப்பவாத சோம்பேரிகளாகவும் கால்வாசி பேர் அறியாமை கொண்ட உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வேகமாக பரவும் இந்நோய் உயிரை கொள்ளும் அளவுக்கு மிகவும் கொடியது என சந்தர்ப்பவாதிகளிடம் இருந்து ஒலித்த குரலால் பலர் அச்சத்தில் உறைந்து மாண்டனர். சிலர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டனர். மற்றவர்களோ அந்நோயை கொடிய அரக்கன் என கற்பனை செய்து வீட்டுக்குளே முடங்கி கிடந்தனர் அவர்களிடம் உண்ண உணவும் பணமும் இருந்ததால் அவர்களால் சவுகிரியமாக இருக்க முடிந்தது. ஆனால் உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மக்களின் நிலையோ பரிதாபமாக இருந்தது. அவர்கள் பசி பட்டினியுடன் வேறுவழியின்றி இந்த சந்தர்ப்பவாதிகள் சொல்லைக் கேட்டு வீட்டினுள் இருந்தனர். ஆனால் இக்கால கட்டத்தில் அஞ்சாநெஞ்சம் கொண்ட மல்யுத்த வீரனோ இயல்பாகவே தன்னுடைய பயிற்சிகளும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். ஒரு நாள் ஒரு சோம்பேறி இளைஞன் அந்த மல்யுத்த வீரனிடம் வந்து நாடே நோய்த்தொற்று பரவி நாசமாய் கொண்டிருக்கிறது நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறாயா எனக் கேட்டான். அதற்கு அந்த மல்யுத்த வீரனோ நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்றான். கோபத்துடன் வந்த இளைஞன் ஏன் கவலைப்பட வேண்டுமா என் பெற்றோர்கள், சகோதரன், நண்பன் என அனைவரையும் நான் இந்நோயால் இழந்துள்ளேன் உனக்கு தெரியுமா எனக் கேட்டான்.
உன் நண்பனுக்கு எத்தனை வயது என்றால் மல்யுத்த வீரன்.
29 வயது என்றான் அந்த இளைஞன்.
என்ன வேலை செய்துகொண்டிருந்தான் உன் நண்பன் என்றான் மல்யுத்த வீரன்.
கேளிக்கைகளில் ஈடுபட்டு வெட்டியாக பொழுதை கழித்து வந்தான் என்றான் இளைஞன்.
அவன் எந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டு வந்தான் எனக்கேட்டான் மல்யுத்த வீரன்.
எதற்கு இந்த தேவையில்லாத கேள்வி என கோபமாகக் கேட்டான் அந்த இளைஞன்.
தேவையான கேள்வி தான் பதில் கூறு என்றால் மல்யுத்த வீரன்.
எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டுவந்தான் என் நண்பன் எனக் கூறினான் அந்த இளைஞன்.
மல்யுத்த வீரன் - நீ ?
இளைஞன் - நானும் அந்த உணவு பழக்கங்களையே கொண்டுள்ளேன்.
மல்யுத்த வீரன் - சரி இறுதியாக ஒரு கேள்வி இதற்கு நேர்மையான பதிலை உன்னிடம் எதிர்பார்க்கிறேன்.
இளைஞன் - என்ன ?
மல்யுத்த வீரன் - நீயும் பரவிவரும் இந்நோயால் இறப்பாய் என அஞ்சுகிறாயா ?
இளைஞன் - நிச்சயம் நான் அஞ்சுகிறேன்.
அவனின் இந்த பதிலை எதிர்பார்த்தா மல்யுத்த வீரன் அவனுக்கு பதில் அளிக்க ஆரம்பித்தான்,
ஆனால் எனக்கு அச்சம் இல்லை ஏனென்றால் நான் மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை. ஏனெனில் நாம் அனைவருக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்டது இன்றோ அல்லது நாளையோ அது நம்மை நாடி வரும் அதுவரை வாழ்வின் இந்நொடிகளை ரசித்து வாழபழக வேண்டும். அதுமட்டுமின்றி கடின உழைப்பு மற்றும் உடற்பயிற்சி, சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடல் எக்கு கோட்டையாகவும் அதனுள் உயிர் வைரமாகும் பாதுகாக்கப்படும் அந்த வைரத்தை திருட வரும் எமனும் ஏமாந்துத்தான் போவான் எனக் கூறி மீண்டும் தன் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டான் மல்யுத்த வீரன். தன்னம்பிக்கையும் தைரியமும் எந்நோயையும் குணப்படுத்தும் அருமருந்து என்ற உண்மையை மல்யுத்த வீரனிடமிருந்து கற்ற இளைஞன் அந்த உண்மையை நாடு முழுவதும் பரப்பினான்.
அந்நாட்டு மக்களும் தங்கள் அச்சத்தை விடுத்து உடல் உழைப்பில் ஈடுபட்டும் உடற்பயிற்சிகள் செய்தும் மற்றும் இயற்க்கையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டும் எந்நோயும் அண்டாத ஆரோக்கியமான சமுதாயத்தை உண்டாக்கினார்.
மல்யுத்தவீரரனும் தன் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கையால் பின் வந்த ஆண்டில் தான் எதிர்கொண்ட பலசாலி மல்யுத்த வீரர்களை வீழ்த்தி மாவீரன் பட்டத்தை வென்று தன் நாட்டு மக்களை பெருமையடைய செய்தான்.
✍️பாலி
25/04/2021
Kamaru Usman MMA lost his second and only fight of his professional career when tapped out to a rear naked Choke against Jose Caceres.
He says the only reason he tapped was because of a 6 month medical suspension, he would get and he needed money. Usman says he had only $17 at this time.
Today, 8 years later he’s one of the best, if not the best welterweights of all time with almost $3,000,000 career earnings, without ppv’s or sponsorships.
( via Vukoje mma)
www.mmaindia.com
25/04/2021
Still the greatest
in Africa.🔥
Hats off kumaro 👏