29/12/2025
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் "அன்பாடும் முன்றில் "திட்டத்தின் கீழ் நாங்குநேரி பகுதியை சுற்றி இருக்கக்கூடிய கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு Focus Block Fevelopment Program மூலம் இலவச போட்டி தேர்வுக்கான அளிக்கப்பட்டதில் முதற்கட்டமாக பயிற்சி பெற்ற மாணவர்கள் 10 பேர் தற்போது இந்திய ராணுவத்தில் இணைய உள்ளனர் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் Dr. R. Sukumar, IAS அவர்கள் மாணவர்களுக்கு கேடயம் பரிசளித்து மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்... மேலும் எனக்கு சிறந்த பயிற்சியாளருக்கான விருதும் அளித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு நன்றி.
இதற்கு உறுதுணையாக இருந்த திருநெல்வேலி மேற்கு காவல் துறை அதிகாரி Dr. Prassanna Kumar's IPS அவர்களுக்கும் , நாங்குநேரி வட்டாட்சியர் திரு. Balakrishnan Sir அவர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.Yamuna Mam அவர்களுக்கும் அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகள்.
❤️
21/12/2025
11 மாத கால கடுமையான உடற்பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டு இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் 💂 பணியாற்ற இருக்கும் எனது மாணவன் தம்பி திரு.மணிபாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💫🙏🔥 இவர்களைப் போன்று மாணவர்களை பார்க்கும் பொழுது எங்களுக்கு மேலும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் எங்களது பணியை மேலும் தொடர்ந்து செய்வதற்கு ஊக்கம் அளிக்கிறது. நன்றி 🙏 CT/GD MANI BALA ( INDO-TIBETAN BORDER POLICE).
After 11 months of Struggling our student Mr Mani Bala successfully completed his ITBP CT/GD TRAINING. CONGRATULATIONS MY boy🔥💫💫💂💂💂💂❤️
04/08/2025
இன்று திருநெல்வேலி மாவட்டம் டி.கள்ளிகுளம் தமிழ்நாடு தட்சிண மாற நாடார் சங்கக் கல்லூரி (டி.டி.எம்.என்.எஸ் )
கல்லூரியில் ,
மாணவ மாணவிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் அதன் போட்டித் தேர்வுகளை எப்படி எளிதாக எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்🙏💫💫😊😊❤️
Today Tirunelveli District D. Kallikulam Tamil Nadu Dakshina Marana Nadar Sangam College TDMNS
In college
I am very happy to attend the function as a special guest to create awareness among the students about central and state government jobs and how to face their competitive exams easily.
25/04/2025
இன்றைய தினம் நமது நான்குநேரி இளையோர் திறன் மேம்பாட்டு பிரிவில் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு அனைத்து அரசு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் கையேடுகளை நாங்குநேரி துணைக் கண்காணிப்பா திரு . Dr. PRASANNAKUMAR .IPS நான்குநேரி ASP Sir அவர்கள் வழங்கினார்🙏. இந்த புத்தகங்களை நமக்கு வழங்க உறுதுணையாக இருந்த வட்டாட்சியர் Thasildar Sir, வட்டார வளர்ச்சி அலுவலர் BDO Mam மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏❤️ இந்த பொன்னான வாய்ப்பினை வாய்ப்புகளை பயன்படுத்தி நமது மாணவர்கள் பல்வேறு அரசு துறைகளில் சேர்ந்து நமது நான்குநேரி வட்டாரத்திற்கு பெருமை சேர்க்க எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏.... வரும் காலங்களில் உங்களை போன்று பல சாதனையாளர்களை உருவாக்கிட வேண்டும்...🙂🙂