08/06/2026
பூட்டானை வீழ்த்தி இலங்கை அணிக்கு அபார வெற்றி!
இலங்கை தேசிய கால்பந்து அணி, பூட்டான் அணிக்கெதிரான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று மற்றுமொரு முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
உலக கால்பந்து தரவரிசையில் 191-வது இடத்தில் உள்ள இலங்கை அணி, தங்களை விட 4 இடங்கள் முன்னிலையில் இருந்த பூட்டான் அணியை ஆதிக்கத்துடன் வீழ்த்தி தனது முன்னேற்றத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
08/06/2026
டெஸ்ட் சம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி முன்னேற்றம்.
ICC டெஸ்ட் சம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி பெற்ற இந்த தோல்வியை அடுத்து புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி முன்றாம் இடத்திற்கு முன்னெறியுள்ளது.
2025 - 2027 ஆம் ஆண்டுகளுக்கான ICC டெஸ்ட் சம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
08/06/2026
இலங்கைக்கு பெருமை சேர்த்த ரிலாஸ் முகம்மது!
Ajmal Hussain
கத்தார் கிரிக்கெட் சங்கம் (QCA) நடத்திய Level 2 Umpire தேர்வில் இலங்கையைச் சேர்ந்த Rilas Mohamed சிறப்பான சாதனை படைத்துள்ளார்.
மொத்தம் 53 பேர் பங்கேற்ற இத்தேர்வில் வெற்றி பெற்ற 8 பேரில் ஒருவராகத் தெரிவான அவர், வெற்றியடைந்தவர்களில் ஒரே இலங்கையர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சர்வதேச தரத்திலான நடுவர் தகுதியை நிரூபிக்கும் இந்த வெற்றி, ரிலாஸ் முகம்மதின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இந்தச் சாதனை அவரது தனிப்பட்ட வெற்றியாக மட்டுமல்லாமல், இலங்கை கிரிக்கெட் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
ரிலாஸ் முகம்மதுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! 👏🎉
ශ්රී ලංකාවට ගෞරවයක් ගෙන දුන් රිලාස් මොහොමඩ්! 🇱🇰🏏
කටාර් ක්රිකට් සංගමය (QCA) විසින් පවත්වන ලද Level 2 Umpire විභාගයේදී ශ්රී ලාංකික රිලාස් මොහොමඩ් විශිෂ්ට ජයග්රහණයක් ලබාගෙන ඇත.
සමස්තයෙන් 53 දෙනෙකු සහභාගී වූ මෙම විභාගයෙන් සමත් වූ 8 දෙනා අතරට තේරී පත් වූ ඔහු, එම ජයග්රාහකයින් අතර සිටි එකම ශ්රී ලාංකිකයා වීමේ ගෞරවයද හිමි කරගෙන ඇත.
ජාත්යන්තර මට්ටමේ විනිසුරු සුදුසුකමක් තහවුරු කරන මෙම ජයග්රහණය, රිලාස් මොහොමඩ්ගේ දක්ෂතාවය, කැපවීම සහ දැඩි උත්සාහය සඳහා ලැබුණු ඉහළ පිළිගැනීමක් ලෙස සැලකේ.
එමෙන්ම, මෙම ජයග්රහණය ශ්රී ලංකා ක්රිකට් ප්රජාවටද මහත් අභිමානයක් ගෙන දෙන සුවිශේෂී සන්ධිස්ථානයක් ලෙස සැලකේ.
රිලාස් මොහොමඩ් මහතාට අපගේ උණුසුම් සුබ පැතුම් හා හෘදයාංගම ප්රශංසාව! 👏🎉
08/06/2026
தம்புள்ளையில் Trophy அறிமுகம்! நாளை முதல் முக்கோண 'A' அணி தொடர் விறுவிறுப்புத் தொடக்கம்!
இளம் கிரிக்கெட் நட்சத்திரங்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நடத்தும் முக்கோண 'A' அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் (Tri-Nation 'A' Series 2026) அதிகாரப்பூர்வக் கோப்பை (Trophy) தம்புள்ளையில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
08/06/2026
#மே.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக தயாராகும் இலங்கை அணி!
08/06/2026
இந்திய கிரிக்கெட் அணியில் முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்றக்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் அவரது பெற்றோரும் உடன் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 1989ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது 16ஆவது வயதில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது, அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு நெகிழ்ச்சியான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்துள்ளது.
இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூர்யவன்ஷி தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் முத்தரப்பு தொடருக்காக இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.
அவர் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த கட்டத்திற்கு அவர் நகர உள்ளதால், அவரது மன உறுதியை அதிகரிக்கவும், தேவையற்ற அழுத்தங்களைக் குறைக்கவும் அவரது பெற்றோர் அருகில் இருப்பது அவருக்கு மிகச் சிறந்த ஆதரவாக இருக்கும் என்று பி.சி.சி.ஐ கருதுகின்றது என பி.சி.சி செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
08/06/2026
2026 ஆம் ஆண்டுகான அட்டாளைச்சேனை பிரதேச செயலக சம்பியனாக சுப்பர் சொனிக் விளையாட்டு கழகம் மகுடம் சூடியது!
07/06/2026
6-வது தடவையாக எதிர்வரும் June 27,28, 29ம் திகதிகளில் நடைபெறவுள்ள
நிந்தவூர் அல் அஷ்ரக் PPA Encounter Session-VI கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான (Fixture Draw) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
07/06/2026
தாய்லாந்தில் இலங்கைக்காக களமிறங்கும் கிழக்கின் இரு வீரர்கள்!
தாய்லாந்தில் நாளை நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில், பூட்டான் அணியை எதிர்கொள்ளும் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களான Munshif Ahamed மற்றும் Mohamed Mursith ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் பெருமையை தேசிய மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் இவ்விரு வீரர்களும் இலங்கை அணியின் வெற்றிக்காக சிறப்பாக விளையாடி நாட்டிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!