இலங்கை கிரிக்கட் அணியின் ஆதரவாளர்கள்

இலங்கை கிரிக்கட் அணியின் ஆதரவாளர்கள்

Share

வெற்றியோ தோல்வியோ எம் ஆதரவு என்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கே!

16/06/2026

நேத்து இரவெல்லாம் ஒரே அழுகையாம் அப்றம் சோட்டா பீமும், பென் 10 கார்டூனும் உம் போட்டு காட்டித்தான் குழந்தைய தூங்க வெச்சம். 😭

15/06/2026

சரி சரி கோவப்படாதிங்க பாஸ்.

15/06/2026

மாதுளன், வியாஸ் & சிராஸ் என்னு மூனு தமிழ் பசங்க மாமா. ஒட்டுமொத்த IPL ஹீரோக்களும் விளாடின இந்திய A அணியை தோற்கடிச்சி மாஸ் காட்டிருக்காங்க பரமா!

14/06/2026

வெற்றியோடு இந்த விடியல் ஆரம்பம். காட்டடி பேயடி வெஸ்ட் இன்டீஸ் டீமோட அதிரடி வின் பண்ணி நம்ம சிக்கல்களுக்கு லைக்ஸ் தெறிக்கட்டும்.

09/06/2026

இந்திய அணியின் Boss Baby என அழைக்கப்படும் சூர்யவன்சியின் விக்கெட்டை, இலங்கை A அணியின் மொஹமட் சிராஸ் கைப்பற்றியுள்ளார். 🥵

05/06/2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) மாற்றுக்குழுவுடன் (Transformation Committee) இணைந்து கொண்ட குமார் சங்கக்கார, தேசிய அணி, இலங்கை ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிகளைச் சேர்ந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை சந்தித்தார்.

இதன்போது, குழுப்பணி (teamwork), ஒழுக்கம் மற்றும் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த தனது ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

03/06/2026

இன்டைல இருந்து சிறப்பான தரமான சம்பவங்களை எதிர்பார்க்கலாம்!

08/05/2026

விக்கட்டுக்களை சாய்க்கும் மொஹமட் சிராசுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் நிரந்தர இடம் கிடைக்குமா?

(எஸ்.எம்.அறூஸ்)

இலங்கை கிரிக்கெட் அணியில் நீண்ட காலத்திற்குப் பிறகு விளையாடிய தமிழ் பேசும் வீரராகவும்,முஸ்லிம் வீராகவும் கண்டி மடவளையைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.

மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான மொஹமட் சிராஸ் கடந்த பத்து வருடங்களாக இலங்கையின் முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதுடன் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். குடும்பக் கஸ்டங்கள்,சவால்களை பெரிதும் வெற்றி கொண்டே கிரிக்கெட் துறையில் இன்று சிராஸ் பிரகாசித்து வருகிறார்.

2019ம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணிக்காகத் தெரிவு செய்யப்பட்டு தென்னாபிரிக்காவுக்கு சென்றபோதும்,விளையாடும் 11 பேரில் மொஹமட் சிராஸ் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதன் பின்னர் 2024ம் ஆண்டு இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு வருகை தந்த இந்திய அணிக்கெதிராக ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கு மொஹமட் சிராஸ் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

அப்போட்டியில் சிராஸ் சிறப்பாகப் பந்துவீசியதால், அதே வருடம் நவம்பர் மாதம் இலங்கை வந்த நியுசிலாந்து அணிக்கெதிராக விளையாடும் இலங்கை அணியிலும் மொஹமட் சிராஸை கிரிக்கெட் தெரிவுக் குழவினர் தேர்வு செய்தனர். கண்டி பல்லேகலயில் நடைபெற்ற நியுசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய சிராஸ் தனது முதலாவது சர்வதேச விக்கட்டினைக் கைப்பற்றினார்.

இதன் பின்னர் மேற்கிந்தியத்தீவுகள் அணி,அவுஸ்திரேலிய அணி என பல நாட்டு அணிகளுக்கெதிராக விளையாடும் இலங்கை ஒருநாள் அணியில் மொஹமட் சிராஸ் இடம்பெற்றிருந்த போதிலும் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. பின்னர் இன்றுவரை இலங்கை தேசிய அணிக்கு மொஹமட் சிராஸ் தெரிவாகவில்லை. இது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு பெருத்த கவலையாகும்.மிகச்சிறந்த ஒரு வீரரை தேசிய அணிக்குள் கொண்டு வராமல் இருப்பதன் மர்மத்தை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் பரவலாகக் காணப்படுகிறது.

ஆனாலும், இலங்கை ஏ அணி, பிரீமியர் லீக் போட்டிகள், மேஜர் லீக் போட்டிகள்,தேசிய சுப்பர் லீக போட்டிகள்;,எல்.பி.எல்.போட்டிகள்,வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான போட்டிகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் தெரிவு அணிகளிலும் மொஹமட் சிராஸ் தொடர்ந்தும் விளையாடி வருவதுடன் தனது அதீத திறமைகளையும் வெளிப்படுத்தி வருகின்றார்.

மடவளை மதீனா தேசிய பாடசாலையின் 13 வயதுக்குட்ட கிரிக்கெட் அணியின் வீரராக கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்த இவர் தனது பாடசாலையின் வெற்றிக்காக பந்துவீச்சு மூலமும்,துடுப்பாட்டத்தின் மூலமும் சகலதுறை வீரராக திறமையை வெளிப்படுத்தியவர்.

அப்பாடசாலையின் 15,17,19 வயதுப் பிரிவுகள் அணிகளிலும் சிராஸ் விளையாடினார்.முஹம்மட் றிக்காஸ்,இஹ்சான் நஜீமி ஆகியோரின் பயிற்சியின் கீழ் விளையாடிய சிராஸின் கிரிக்கெட் முன்னேற்றத்திற்கும்,வளர்ச்சிக்கும் அவரது தந்தை சஹாப்,தாய் சரிக்கா ஆகியோருடன் இம்தியாஸ்,மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ஹிதாயா ஆகியோர் முக்கிய பங்களிப்பினை வழங்கினர்.

பாடசாலையைக் கல்வியை முடித்துக் கொண்டதன் பின்னர், சிராஸின் திறமையை இணங்கட்டு கொண்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் வசந்த குமார மூலம் 23 வயதுக்குட்பட்ட போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

முதல்தர போட்டிகளுக்காக கொழும்பு கோல்ட்ஸ் அணியில் இணைந்து கொள்ளும் முன் குருநாகல் இளையோர் கிரிக்கெட் அணி,கண்டி இளையோர் அணி மற்றும் மத்திய மாகாண அணிகளுக்காக விளையாடி கூடுதலான விக்கட்டுக்களைக் கைப்பற்றி தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.அதிலும் குருநாகல் வை.சி.சி கிரிக்கட் கழகத்தில் மூன்று வருடங்கள் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று இடம்பெற்றது.இதில் 137 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசிய சிராஸ் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் சமில கமகே எனும் கிரிக்கெட் பயிற்சியாளர் சிராஸை கொழும்புக்கு கூட்டிச்சென்றதுடன் பிரபல கழகம் ஒன்றில் அவரை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கொழும்பின் பிரபல கழகங்களில் ஒன்றான கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் சிராஸை தமது கழகத்தில் இணைத்து கொண்டது. 2016-17 பிரீமியர் லீக் தொடரில் முதற்தர அறிமுகத்தை சிராஸ் மேற்கொண்டார்.

கோல்ட்ஸ் அணிக்கும், மூவர்ஸ் அணிக்குமிடையிலான மூன்று நாள் போட்டி கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 367 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மூவர்ஸ்(சோனகர்) விளையாட்டுக் கழகம் முதலாவது இன்னிங்ஸில் 158 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதில் மொஹமட் சிராஸ் 5 ஓவர்கள் பந்துவீசி 37 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினைக் கைப்பற்றினார். மூவர்ஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்;றது. மொஹமட் சிராஸூக்கு இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்போட்டியில் கோல்ட்ஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 77 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இதேவேளை, 2017ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்த மாவட்டங்களுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கேகாலை மாவட்ட அணியில் இடம்பெற்ற மொஹமட் சிராஸ் தனது முதலாவது போட்டியில் குருணாகல் மாவட்ட அணிக்கெதிராக விளையாடினார்.

கொழும்பு கோல்ட்ஸ் கழக மைதானத்தில் 2017 மார்ச் 19ம் திகதி இடம்பெற்ற இப்போட்டியில் குருணாகல் மாவட்ட அணி 34.4 பந்துவீச்சு ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மொஹமட் சிராஸ் 7 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களைக் கொடுத்து 3 முக்கிய விக்கட்டுக்களைக் கைப்பற்றி தனது திறமையை நிருபித்தார். இப்போட்டியில் இலங்கை அணி வீரர் அகில தனஞ்சய 12 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்குத்துடுப்பெடுத்தாடிய கேகாலை மாவட்ட அணி 20.3 பந்துவீச்சு ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.இதில் குசால் பெரேரா ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும்,அவிஸ்க்க பெர்னாண்டோ 47 ஓட்டங்களையும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

மொஹமட் சிராஸ் தனது முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 2018ம் ஆண்டு தமிழ் யூனியன் கழகத்திற்கு எதிராக விளையாடினார். என்.சி.சி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் அணி 11.3 பந்துவீச்சு ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களைப்பெற்றது. இதில் சிராஸ் ஒரு ஓவர் பந்துவீசி 6 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினைக் கைப்பற்றினார். இப்போட்டியில் கோல்ட்ஸ் அணி 10.3 பந்துவீச்சு ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

2018ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 23 வயதின் கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் மத்திய மாகாண அணிக்காக விளையாடிய மொஹமட் சிராஸ் மொத்தமாக 26 விக்கட்டுக்களைக் கைப்பற்றியதுடன் இத்தொடரில் கூடுதல் விக்கட்டுக்களைப் பெற்ற வீரராகவும் தெரிவானார்.

கோல்ட்ஸ் கழகத்திற்காக விளையாடி வரும் சிராஸ் 2018 கிரிக்கெட் பருவகாலத்திற்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மேஜர் எமர்ஜிங் லீக் முதற்தரக் கிரிக்கெட் தொடரில் 30க்கும் மேற்பட்ட விக்கட்டுக்களை சாய்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதேபோன்று வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான டி-20 கிரிக்கெட் தொடரில் ஜோன் கீல்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் மாத்திரம் விளையாடி 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இவ்வாறு உள்ளுர் போட்டிகளில் இவர் மிகச்சிறப்பாக பந்துவீசி வருவதால் இலங்கை வந்த அயர்லாந்து அணிக்கெதிராக விளையாடும் இலங்கை ஏ அணிக்காக முதல் தடவையாக மொஹமட் சிராஸ் தெரிவு செய்யப்பட்டார்.

கொழும்பில் நடைபெற்ற முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் 6 விக்கட்டுக்களையும், ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கட்டினையும் கைப்பற்றியிருந்தார்.

முயற்சியைக் கைவிடாமல் போராட்ட குணம்படைத்த வலதுகை வேகப்பந்துவீச்சாளராக திறமைகளை வெளிப்படுத்தி வந்த இளம் வீரரான மொஹமட் சிராஸ் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இலங்கை அணிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை கிரிக்டெ; அணி டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட நான்காவது முஸ்லிம் வீரராக மொஹமட் சிராஸ் வரலாற்றில் இடம்பிடித்தார். இதற்கு முன்னர் நவீட் நவாஸ்,ஜெஹான் முபாரக்,பர்வீஸ் மஹ்றூப் ஆகியோர் இலங்கை அணிக்காக டெஸ்ட் விளையாடிய வீரர்களாவர்.

இலங்கை அணிக்குத் தெரிவு செய்யப்பட்டது தொடர்பில், மொஹமட் சிராஸ் ஊடகங்களுக்கு அப்போது கருத்துத் தெரிவிக்கையில்,முதலில் அல்லாஹ்வுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அல்ஹம்துலில்லாஹ்.அதன் பிறகு எனது பெற்றோர்களான சஹாப்,சரீக்கா ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால் அவர்கள் இல்லாவிட்டால் நான் இந்தளவு தூரத்திற்கு வந்திருக்க முடியாது.என்னை இந்த இடத்துக்குக் கொண்டுவருவதற்கு பல கஸ்டங்களையும்,துன்பங்களையும் அவர்கள் அனுபவித்துள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக,நான் தென்னாபிரிக்க தொடருக்கு தெரிவானதைக் கேட்ட எனது தாயார் சரீக்கா அடைந்த சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.எனவே என்னை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும் என கனவு கண்ட எனது தாய்க்கு நான் சந்தோசத்தைக் கொடுத்துவிட்டேன்.அதேபோல் பாடசாலைக் காலத்திலிருந்து இதுவரை என்னை வழிநடாத்திய அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அவர் பிறந்த ஊரான கண்டி மடவளையில் ஊர் கூடி வரவேற்பு ஏற்பாடு செய்ததுடன் சிராஸ் படித்த மடவளை மதீனா தேசிய பாடசாலையில் கௌரவிப்பும் இடம்பெற்றது.

பாடசாலைக் கிரிக்கெட்டில் டிவிசன் மூன்றாம் தரத்தைக் கொண்ட மடவளை மதீனா தேசிய பாடசாலையிலிருந்து ஒரு வீரர் தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பது வரலாற்றுச் சாதனைதான் என்றால் அது மிகையாகாது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் தென்னாபிரிக்கா சென்ற மொஹமட் சிராஸூக்கு விளையாடும் 11பேர் கொண்ட அணியில் வாய்ப்புக்கிடைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்த நிலையில்,அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதற்காக மொஹமட் சிராஸ் கவலைப்படவில்லை.மகிழ்ச்சியாகவே இருந்தார்.

ஆனாலும்,தென்னாபிரிக்க அணியுடன் தோல்வியடைவது நிச்சயம் என்ற நிலையிலிருந்து தனி ஒருவனாக ருத்ரதாண்டவம் ஆடிய குசால் ஜெனித் பெரேராவின் சதத்துடன் இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொண்டது. அந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொண்ட இலங்கை குழாமில் மொஹமட் சிராஸ் இடம்பெற்றதும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகும்.

தென்னாபிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய சிராஸ் உள்ளுர் போட்டிகளில் மீண்டும் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தினார்.2019 மார்ச்சில் இடம்பெற்ற தேசிய சுபர் லீக் மாகாண ஒருநாள் போட்டிக்கான தினேஸ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணிக்கு தெரிவான சிராஸ் இத்தொடரிலும் மிகச்சிறப்பாக பந்துவீசினார்.

2019 ஜூன் மாதமளவில் தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்ட இலங்கை வளர்ந்து வரும் அணியிலும் இடம்பெற்ற மொஹமட் சிராஸ் இரண்டாவது நான்கு நாள் போட்டியில் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் பிரகாசித்தார்.

தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் அணி முதல் இன்னிங்ஸில் 382 ஓட்டங்களையும்,இரண்டாவது இன்னிங்ஸில் 189 ஓட்டங்களையும் பெற்றது. இலங்கை வளர்ந்து வரும் அணி முதல் இன்னிங்ஸில் 241 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 302 ஓட்டங்களையும் பெற்று 28 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதும் 145/1 என்ற நிலையில், மத்திய வரிசைத்துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத்தவறியதால் 214/7 என்ற நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டது. கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த மொஹமட் சிராஸ் மற்றும் நிசான் பீரிஸ் ஆகியோர் 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாப் பெற்று நம்பிக்கையளித்தனர்.

எனினும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வந்த மொஹமட் சிராஸ் 49 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறியமை இலங்கையின் எதிர்பார்ப்பு சிதறியது. 90 பந்துகளைச் சந்தித்த சிராஸ் 7 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். இறுதியில் இலங்கை வளர்ந்து வரும் அணி 94.1 பந்துவீச்சு ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 28 ஓட்டங்களினால் தோல்வி கண்டது. இப்போட்டியில் 15 ஓவர்களை வீசிய சிராஸ் 63 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

அதேபோன்று 2019 ஆகஸ்ட் மாதம் இலங்கை வந்த நியுஸிலாந்து அணிக்கெதிரான இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் அணியிலும் சிராஸ் இடம்பெற்றார். ஒக்டோபர் மாதம் பங்களாதேஸ் நாட்டுக்கான இலங்கை ஏ அணிக்குத் தெரிவான சிராஸ் அங்கு நடைபெற்ற நான்கு நாள் போட்டியில் 18 ஓவர்கள் பந்துவீசி 41 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கட்டினைக் கைப்பற்றினார்.

அதே வருடம் இலங்கை வந்த பங்களாதேஸ் ஏ அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற நான்கு நாள் போட்டியில் சிராஸ் 21.1 பந்துவீச்சு ஓவர்களை வீசி 63 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

வருடா வருடம் நடைபெறும் வர்த்தக சேவை நிறுவனங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் ஜோன் கீல்ஸ் அணிக்காக விளையாடிய மொஹமட் சிராஸ் மார்ஸ் ஹோல்டிங் அணிக்கெதிராக மிகச்சிறப்பாக 9 ஓவர்கள் பந்துவீசி 48 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றி நல்லதொரு தொடக்கத்தை ஆரம்பித்தார். அதேபோன்று இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கெதிராக 14 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.

இவ்வாறு உள்ளுர் மற்றும் சர்வதேச அணிகளுக்கெதிராக சிராஸ் சிறப்பாகப் பந்துவீசி வருவதால் கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் 2020 மார்ச்சில் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணிக்கு தெரிவு செய்தது.

கொழும்பில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 463 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் சிராஸ் 18 ஓவர்கள் பந்துவீசி 68 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார். இங்கிலாந்து அணியுடனான சிராஸின் பந்துவீச்சை பல ஊடகங்களும் பாராட்டி எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

2020 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற சுப்பர் எய்ட் N;மஜர் லீக் போட்டிகளில் பீ.ஆர்.சி அணிக்காக விளையாடிய சிராஸ் சரசன்ஸ் அணிக்கெதிராக 21 ஓவர்கள் பந்துவீசி 74 ஓட்டங்களைக் கொடுத்து முக்கிய 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். 2020 ஒக்டோபர் மாதம் இலங்கை கிரிக்கெட் தலைவர் கிண்ண 50 ஓவர் போட்டியில் திமுத் கருணாரத்ன அணிக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் அத்தொடரிலும் சிராஸ் சிறப்பாகப் பந்துவீசினார்.

முதற் தடவையாக 2020ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரிமியர் லீக் போட்டிகளின் முதலாவது அத்தியாயத்திற்காக மொஹமட் சிராஸ் காலி க்ளேடியட்டர்ஸ் அணிக்காக உள்ளீர்க்கப்பட்டதுடன் அந்த அணிக்காகவும் விளையாடினார். இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் காலி க்ளேடியட்டர்ஸ் அணிக்காக சிராஸ் சிறப்பாகப் பந்துவீசினார்.

2021 மார்ச்சில் இடம்பெற்ற எஸ்.எல்.சி டி20 போட்டிகளுக்காக பீ.ஆர்.சி அணியில் இடம்பெற்ற சிராஸ் காலி அணிக்கெதிராக 2 விக்கட்டுக்களையும்,கண்டி கஸ்டம்ஸ் அணிக்கெதிராக ஒரு விக்கட்டினையும்,பதுரெலிய அணிக்கெதிராக 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினார்.

எஸ்.எல்.சி.மேஜர் கிண்ண ஒருநாள் போட்டியில் விமானப்படை அணிக்கெதிராக 34 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களையும் வீழ்த்தி தான் ஒரு அசைக்க முடியாத வேகப்பந்துவீச்சாளன் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்தார்.

இலங்கை அணிக்கும், இலங்கையின் சிரேஸ்ட வீரர்கள் அணிக்கும் இடையில் கண்டி பள்ளேகலேயில் இடம்பெற்ற கண்காட்சிப் போட்டிக்கான அணியிலும் சிராஸ் இடம்பெற்றார்.2021ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் ஏ அணிக்கான வீரர்கள் பட்டியலில் மொஹமட் சிராசும் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

2021 ஆகஸ்டில் எஸ்.எல்.சி அழைப்பு டி20 சுற்றுத்தொடருக்காக எஸ்.எல்.சி ரெட்ஸ் அணிக்காக சிராஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தபோதும், முதல் போட்டிக்கு முன்னதாகவே அவருக்கு கோவிட் - 19 தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் இச்சுற்றுத்தொடரிலிருந்து விலக்கப்பட்டார். 2021 ஒக்டோபரில் பாக்கிஸ்தான் ஏ அணிக்கெதிராக விளையாடும் இலங்கை ஏ அணிக்கு மீண்டும் சிராஸ் தெரிவானார்.

2022 மார்;ச்சில் தேசிய சுப்பர் லீக் தொடரில் காலி அணிக்காகப் பெயரிடப்பட்டிருந்த சிராஸ் இத்தொடரிலும் தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி கூடுதலான விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். இதேபோன்று மேஜர் கழகங்களுக்கிடையிலான எமர்ஜிங் மூன்று நாள் சுற்றுத்தொடரில் கோல்ட்ஸ் அணிக்காக விளையாடிய சிராஸ் ஏஸ் கெபிடல்ஸ் அணிக்கெதிராக 54 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கட்டுக்களைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

2022ம் ஆண்டு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை வந்த பங்களாதேஸ் அணிக்கெதிராக விளையாடும் இலங்கையின் உத்தேச அணியிலும் சிராசின் பெயர் இடம்பெற்றிருந்தாலும் இறுதிக் குழுhமில் அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவ்வாறுதான் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக விளையாடும் இலங்கையின் உத்தேச அணியிலும் சிராஸின் பெயர் இடம்பெற்றது.

மேலும்,2022 ஜூன் மாதமளவில் அவுஸ்திரேலிய ஏ அணியுடன் விளையாடும் இலங்கையின் ஏ அணியில் மொஹமட் சிராஸூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 2022 ஆகஸ்ட்டில் இடம்பெற்ற எஸ்.எல்.சி மேஜர் லீக் சுற்றுத் தொடரில் கோல்ட்ஸ் அணிக்காக விளையாடிய சிராஸ் கண்டி கஸ்டம்ஸ் அணிக்கெதிராக 12 ஓவர்கள் பந்துவீசி 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

2023ம் ஆண்டு பெப்ரவரி அளவில் நடைபெற்ற தேசிய சுப்பர் லீக் சுற்றுத்தொடரில் காலி அணிக்காக தெரிவான சிராஸ் யாழ்ப்பான அணிக்கெதிராக மிகச்சிறப்பாக பந்துவீசி தனது திறமையை வலுப்படுத்தினார்.இப்போட்டியில் 15 ஓவர்கள் பந்துவீசி 60 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார். தம்புள்ள அணிக்கெதிரான போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றபோது, இவர் 52 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தியாவில் ஐ.பி.எல் போல் இலங்கையில் பிரபலமான எல்.எபி.எல் 2023ம் ஆண்டுக்கான சுற்றுத் தொடருக்காக காலி டைடன்ஸ் அணிக்காக சிராஸ் தெரிவானார். 2023 ஜூலை மாதம் இலங்கை வந்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டிக்காக எஸ்.எல்.எசி.தலைவர் அணிக்கும் சிராஸ் தெரிவானார்.

2023 நவம்பரில் இடம்பெற்ற மூன்று நாட்களைக் கொண்ட எஸ்.எல்.சி.மேஜர் கழகத் தொடரில் பீ.ஆர்.சி அணிக்காக விளையாடிய சிராஸ் கண்டி கஸ்டம்ஸ் அணிக்கெதிராக 31 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

2024ம் ஆண்டு மார்ச்சில் இடம்பெற்ற தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் தம்புள்ள அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிராஸ் கண்டி அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 49 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுக்களையும், யாழ்;ப்பாண அணிக்கெதிராக 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றி தனது அணி இறுதிப்போட்டிக்குத் தெரிவாவதற்கு முழுப்பலத்தையும் வெளிப்படுத்தினார்.

உள்ளுர் போட்டிகளிலும். சர்வதேச நாடுகளின் ஏ அணிகளுடனான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விக்கட்டுக்களைக் கைப்பற்றி வந்த சிராசுக்கு இலங்கை வந்த ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கெதிராக விளையாடும் இலங்கை ஏ அணியிலும் வாய்ப்புக் கிடைத்தது.

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஒரு விக்கட்டினையும், இரண்டாவது போட்டியில் 2 விக்கட்டுக்களையும்,மூன்றாவது போட்டியில் 3 விக்கட்டுக்களையும்,ஐந்தாவது போட்டியில் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றி இத்தொடரில் கூடுதலான விக்கட்டுக்களைக் கைப்பற்றிய வீரராகவும் மொஹமட் சிராஸ் தெரிவானார்.அத்தோடு இலங்கை அணி 3 – 2 என்ற அடிப்படையில் இத்தொடரைக் கைப்பற்றுவதற்கும் பிரதான காரணமாக அமைந்தார்.

2024 மே இல் இடம்பெற்ற எஸ்.எல்.சி.மேஜர் கழக டி20 சுற்றுத்தொடரில் பீ.ஆர்.சி கழகத்திற்காக விளையாடிய சிராஸ் பதுரலிய கழகத்திற்கெதிராக 4 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

மீண்டும் 2024ம் ஆண்டுக்கான எல்.பி.எல் சுற்றுத் தொடருக்காக காலி மார்வல்ஸ் அணிக்காக சிராஸ் உள்வாங்கப்பட்டார். 2024 ஜூலையில் இடம்பெற்ற மேஜர் கழக ஒருநாள் தொடரில் பீ.ஆர்.சி அணிக்காக விளையாடிய சிராஸ் குருணாகல் வை.சி.சி
அணிக்கெதிராக 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

இவ்வாறு தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசி வந்த வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சிராசுக்கு இலங்கை வந்த இந்திய அணிக்கெதிராக விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதிச பத்திரணவுக்கு காயம் ஏற்பட்டதால் சிராஸை அணிக்குள் கட்டாயம் கொண்டுவர வேண்டிய தேவை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினருக்கு ஏற்பட்டது.

அந்த வகையில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மொஹமட் சிராஸ் அறிமுக வீரராக விளையாடினார். இலங்கை அணியின் 213 வது வீரராக சர்வதேசப் போட்டியில் களம் கண்ட சிராஸின் நீண்டகால கனவு நனவானது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து,பல்வேறு கஸ்டங்களுடனும்,சவால்களுடனும் கிரிக்கெட் துறையில் கால்பதித்து இன்று தேசிய கிரிக்கெட் அணிக்கு சிராஸ் விளையாடியது இலகுவான விடயம் அல்ல. அதிலும் சிறுபான்மையின முஸ்லிம் வீரராக அவர் விளையாடியது எல்லோருக்கும் பெருமை தரும் விடயமாகும்.

இப்போட்டியில் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா உட்பட முன்னணி வீரர்களுக்கு எதிராக சிராஸ் சிறப்பாக பந்துவீசினார். இந்திய அணி ஒரு கட்டத்தில் இந்திய அணி இலகுவாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுழல்பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சினால் கூடுதலான விக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன் இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

அடுத்து வந்த இரண்டு போட்டிகளிலும் சுழல்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் சிராஸூக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும் இத்தொடரில் இலங்கை அணி 2 – 0 என்ற நிலையில் வெற்றி பெற்றதுடன் 1997ம் ஆண்டுக்குப்பிறகு இந்தியாவைத் தோற்கடித்த சந்தர்ப்பமாகவும் அமைந்தது.

2024 ஆகஸ்டில் தென்னனாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்ட பசிந்து சூரிய பண்டார தலைமையிலான இலங்கை ஏ அணியில் பெயரிடப்பட்ட சிராஸ் அங்கு நடைபெற்ற போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.

2024ம் ஆண்டு ஒக்டோபரில் இலங்கை வந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக விளையாடும் சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணியில் மொஹமட் சிராஸ் சேர்த்துக்கொhள்ளப்பட்டார். இருந்த போதிலும் இத்தொடரிலும் விளையாடும் அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் இத்தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது.வெற்றி பெற்ற இலங்கைக் குழாமில் சிராஸ் இருந்தார் என்ற பதிவு எல்லோருக்கும் தந்ததுடன் விரைவில் விளையாடும் வாய்ப்புக்கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

அதேபோன்றுதான் 2024 நவம்பர் மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட நியுசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடும் இல

27/04/2026

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு பந்துவீச்சாளரும் எட்டாத, தற்போதைய கிரிக்கெட் சூழலில் இனிமேலும் எட்ட முடியாது என்று கருதப்படும் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்தவர் எமது நுவன் குலசேகர.

​இந்த சாதனையைப் பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். அதாவது, ஐபிஎல் வரலாற்றில் 100 பந்துகளுக்கு மேல் வீசிய பந்துவீச்சாளர்களில், ஒரு சிக்ஸர் கூட கொடுக்காத ஒரே பந்துவீச்சாளர் எமது 'குலே' ஆவார். அவர் CSK அணிக்காக 102 பந்துகளை வீசி, எதிரணி வீரர்களுக்கு ஒரு சிக்ஸர் கூட விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியுள்ளார்.

​தற்கால இருபதுக்கு 20 கிரிக்கெட் முறையானது நாளுக்கு நாள் துடுப்பாட்ட வீரர்களின் சொர்க்கமாக மாறி வருகிறது.
ஒரு அணி 20 ஓவர்களில் 250 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கும் இன்றைய சூழலில், எதிர்காலத்தில் ஐபிஎல் தொடரில் எமது குலசேகர படைத்த இந்த சாதனையை எந்தவொரு பந்துவீச்சாளராலும் முறியடிக்க முடியும் என்று நினைக்கவே முடியாது.

​இருப்பினும், இந்த சாதனையை நெருங்குவதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் ஒருவர் இந்த முறை முயற்சித்தார்.
அவர்தான் சகிப் ஹுசைன். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் ஐபிஎல் தொடரில் 72 பந்துகளை வீசியிருந்தார். அந்த 72 பந்துகளிலும் எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் அவருக்கு எதிராக சிக்ஸர் அடிக்கவில்லை.

​ஆனால், அண்மையில் நிறைவடைந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அந்த சாதனையைத் தகர்த்தெறிந்தார். அவர் சகிப்பின் பந்துவீச்சில் சிக்ஸர் ஒன்றை விளாசி, நுவன் குலசேகரவின் சாதனை தொடர்ந்து நிலைத்திருக்க வழிவகுத்தார்.

​ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எமது வீரர் ஒருவர் படைத்த மற்றுமொரு அற்புதமான சாதனை இதுவாகும். நாளுக்கு நாள் துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக மாறிவரும் இந்த கிரிக்கெட் உலகில், குலசேகர படைத்த இந்த சாதனை என்றென்றும் அழியாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

Want your business to be the top-listed Gym/sports Facility in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Colombo
00001